Posts

மகிமையிலே விசேஷம்

Image
    மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது என்று பரிசுத்த வேதம் கூறுகின்றது. (1 கொரிந்தியர் 15:41) சூரியனுடைய மகிமை வேறு, நட்சத்திரங்களுடைய மகிமை வேறு, சந்திரனுடைய மகிமை வேறு, இப்படி ஒவ்வொன்றுக்கும் வேறு வேறு மகிமை உள்ளது. அது மாத்திரமல்ல நட்சத்திரங்களுக்கும் வேறு மகிமை இருந்தாலும், ஒவ்வொரு நட்சத்திற்கும் இடையே மகிமையிலே வித்தியாசங்கள் காணப்படுகின்றன. மகிமையிலே ஒரு நட்சத்திரம் பெரியதாகவும் ஒரு நட்சத்திரம் சிறியதாகவும் என்னப்படுகின்றது.    எப்படி மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் வித்தியாசம் காணப்படுகின்றதோ, அதேபோல் ஆவிக்குரிய கிரியைகளிலும் ஒன்றுக்கொன்று விசேஷித்திருக்கின்றது. இரட்சிக்கப்பட்டவர்களுக்கும் இரட்சிக்கப்படாதவர்களுக்கும், ஜெபிக்கின்றவர்களுக்கும் ஜெபிக்காதவர்களுக்கும், ஊழியம் செய்கின்றவர்களுக்கும், ஊழியம் செய்யாதவர்களுக்கும் இடையே வித்தியாசங்கள் காணப்படுகின்றன. அப்படியே ஆவிக்குரிய கிரியைகளான ஆராதனை செய்தல், வேதவாசிப்பு, ஜெபிப்பது, கட்டுகளை உடைப்பது, மன்றாடி ஜெபிப்பது போன்றவற்றுக்கு இடையே வித்தியாசங்கள் காணப்படுகின்றன...

தீர்க்கதரிசன வாக்குத்தத்த செய்தி

Image
  நம்மை நேசிக்கின்ற பரலோக தேவன் ஒவ்வொரு நாளும் நம்முடன் பேசி புதுப்புது வாக்குத்தத்தங்களையும், அபிஷேகத்தினை கொடுத்து நம்மை ஆசீர்வதிக்கின்றார். ஒவ்வொரு புது நாட்களிளும் தேதி மட்டுமே மாறும். ஆனால், புது மாதம் வரும்போது தேதி மற்றும் மாதத்தின் பெயர் மாறும். அதே நேரத்தில் புது வருடம் என்றால் தேதி மற்றும் மாதத்தின் பெயர்,   வருடம் மாறும். இப்படி பெரிய பெரிய மாற்றங்கள் வரும்போது பெரிய பெரிய வாக்குத்தத்தங்களை கொடுத்து, பரலோகத்தின் பெரிய பெரிய ஆசீர்வாதங்களையும்   கொடுப்பார்.   சென்ற நவம்பர் மாதத்தினை முடித்து டிசம்பர் மாதத்திற்குள் வந்திருக்கின்றோம். 2024-ம் வருடத்தில் கடைசி மாதமாகும்.   இந்த நாட்களிலும் பரலோக தேவன் நமக்கு நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய   கர்த்தர்   உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக என்ற உபாகமம் 1:11 ம் வசனத்தினை வாக்குத்தத்தமாக கொடுத்துள்ளார்.   இதன்படி ஆயிரம் மடங்கு ஆசீர்வாதத்தினை நமக்கு தந்து ஆசீர்வதிப்பாராக.   நாம் ஆராதிக்கின்ற ஜீவனுள்ள தே...

தீர்க்கதரிசன வாக்குத்தத்த செய்தி

Image
        நீங்கள் நினையாத நாழிகையில் மனுஷகுமாரன் வருவார்; ஆதலால் நீங்களும் ஆயத்தமாய் இருங்கள் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார். (மத்தேயு 24:44) இந்த வார்த்தைக்கு கீழ்படிந்து திருடன் வருகின்ற விதமாக இருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு காத்திருக்கின்ற தேவனுடைய பிள்ளைகளுக்கு, ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சமயத்திலும் புதுப்புது வார்த்தைகளை வாக்குத்தத்தங்களாக தந்து, பரலோக தேவன் திடப்படுத்துகின்றார். அவர்களை பலப்படுத்துகின்றார்.    உற்சாகப்படுத்துகின்றார்.   அதன்படி, இந்த நாட்களிலும் கர்த்தருக்கு காத்திருக்கின்றவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்   என்ற ஏசாயா தீர்க்கதரிசி புத்தகம் 40 ஆம் அதிகாரம் 31 ஆம் வசனத்தை வாக்குத்தத்தமாக கொடுத்துள்ளார்.   இதன்படி, இனி வரும் நாட்களை ஆசீர்வதிப்பார்.   நாம் அனைவருமே கர்த்தருக்காக காத்திருக்கின்றோம். அவருடைய வருகைக்காக காத்திருக்கின்றோம்.  வாக்குத்தத்தங்கள் நிறைவேற காத...

தீர்க்கதரிசன வாக்குத்தத்தம்

Image
           ஒரு நாளின் முதல் பகுதியோ, ஒரு மாதத்தின் முதல் பகுதியோ அல்லது  ஒரு வருடத்தின் முதல் பகுதியோ தேவசமூகத்திற்கு செல்லும் போது,  அந்த முழு நாட்களுக்கான பரலோக தேவனுடைய ஆலோசனையை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன், தேவ சமூகத்தில் சென்று ஜெபிக்கும் போது, அந்தக் காரியத்தினை குறித்த ஆலோசனைகளை பரலோக தேவன் கொடுப்பார். இதில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான காரியம் ஒன்று உள்ளது. முதற்பகுதி தேவசமூகத்திற்குள் சென்றால்தான், தேவஆலோசனைகள் கிடைக்கும்.  மாறாக காரியத்தை நாமே தொடங்கி, நாமே செய்துவிட்டு, பிரச்சனைகள் என்று வந்தவுடன்  தேவ ஆலோசனைகளை பெற நினைப்பது அந்த அளவுக்கு ஆசீர்வாதமாக இருக்காது. ஏனென்றால், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரை கனம் பண்ணு என்று நீதிமொழிகள் 3:9 கூறுகின்றது.  ஒரு நாளில் முதல் நேரம், மாதத்தின் முதல் நேரம், வருடத்தின் முதல் நேரம் தேவனுக்கு கொடுப்பது அவரை கனம் பண்ணுகின்றோம் என்று அர்த்தம்.           இந்த வருடத்தின் புதிய மாதத...

சிறியவனிலும் சிறியவன்

Image
      உலகத்தில் சிறியவர்கள் பெரியவர்கள் என்ற வித்தியாசங்கள் இருக்கின்றன.   அதேப்போல் பரலோக இராஜ்ஜியத்திலும் சிறியவன் பெரியவன் என்று அளவீடும் உள்ளது.   இதைக் குறித்து மத்தேயு 5-ம் அதிகாரம் 19 ஆம் வசனத்தில் தேவனுடைய கட்டளைகள் எல்லாவற்றிலும் சிறிதான ஒன்றையாகிலும் மீறி மனுஷருக்கு போதிப்பவன் சிறியவன் என்றும், எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு போதிப்பவன் பெரியவன் என்றும் கூறுகின்றது. அதேபோல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் யோவான்ஸ்நானகனை குறித்து சொல்லும் போது, பரலோக இராஜ்ஜியத்தில் சிறியவனாக இருக்கின்றவன் எவனோ, அவன் அங்கே   அவனிலும் பெரியவனாக இருக்கின்றான் என்று சொல்கின்றார்.   இதை மத்தேயு 11-ம் அதிகாரம் 11-ம் வசனத்தில் வாசிக்கலாம்.   இரண்டு வசனங்களையும் ஆராய்ந்து பார்க்கும் போது பரலோக இராஜ்யத்தில் பெரியவன் மற்றும் சிறியவன் என்ற அளவீடு உள்ளது என்பது நமக்கு புலப்படும்.    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இந்த அளவீட்டின்படியேதான் யோவான் ஸ்நானகனைக் குறித்து பரலோக இராஜ்யத்தில் சிறியவனாக   இருக்கின்றவன் அவனிலும் பெரியவனாக இருக்க...